Saturday, 28 May 2011

ஸ்ரீரங்கம் நகராட்சியும் நிதி இழப்பீடும்- திருந்துமா இந்த ஸ்ரீரங்கம் நகராட்சி—


ஸ்ரீரங்கம் நகராட்சியும் நிதி இழப்பீடும்- திருந்துமா இந்த ஸ்ரீரங்கம் நகராட்சி—

   ஸ்ரீ ராணா பன்மாடக்குடில் கட்டிட்த்தில் மொத்தம் 24 குடியிருப்புகள் உள்ளது. இந்த கட்டிடம் 2000-ஆம் ஆண்டே கட்டி முடிக்கப்பட்டது. இது நாள் வரை சுமார் 16 அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு வரி விதிக்கப்படவில்லை. இந்த இழப்பீடு பற்றி நகராட்சி நிர்வாகம் எந்த கவலையும் படவில்லை.

   வரி இழப்பீடு பற்றி எழுத்து மூலமாக கேட்டால், முன் தேதியிட்டு வசூலிக்கப்படுவதால் எந்த இழப்பீடும் இல்லை என்று தெரிவித்து பதில் தருகின்றார்கள். ஆனால் 2000- ஆண்டு கட்டப்பட்ட கட்டிடத்திற்கு இது நாள் வரை வரி விதிக்கபடாமல் இருந்துவிட்டு தற்பொழுது வரி விதிக்கவேண்டி 2011-ல்  கேட்ட திரு.எஸ்.வி.துரை மற்றும் காயத்திரி அவர்களிண் வீட்டிற்கு 2005-லிருந்து வரி விதித்துள்ளார்கள்.

   எதை எதிர்ப்பார்த்து இவ்வாறு நகராட்சி உழியர்கள் நடந்து கொள்கின்றார்கள் என்பது தெளிவாகின்றது. இந்நும் 16 வீடுகளுக்கு 2000 ஆண்டிலிருந்து வரி விதிக்கபடுதல் உள்ள நிலையில் இவர்களின் நடவடிக்கையய் என்ன வென்று சொல்வது. வரி இழப்பீடு இல்லை என்று சொல்வதை யார் ஏற்றுக்கொள்வார்கள்.

   இந்த ஒரு கட்டிடத்தில் மட்டும் கடந்த 11 வருடத்திற்கு வரி இழப்பீடு தொகை ஆனது ரூ 2,20,000/= க்கு மேல் என்பது தெளிவு.

   இவர்கள் திருந்த மாட்டார்கள். இழப்பீடு ஏற்பட்டுகொண்டே தான் இருக்கும்.






No comments:

Post a Comment