Thursday, 28 April 2011

ஸ்ரீரங்கம் நகராட்சி நிர்வாகம் நிதி இழப்பீடுவை சரி செய்யுமா? செய்யும்ம்ம்---ஆனா செய்யாது-------ஏஏஏன்—அதுவா---அது அப்படிதான்----


ஸ்ரீரங்கம் நகராட்சி நிர்வாகம் நிதி இழப்பீடுவை சரி செய்யுமா? செய்யும்ம்ம்---ஆனா செய்யாது-------ஏஏஏன்—அதுவா---அது அப்படிதான்----
இந்த மாம்பலசாலை திருச்சிராபள்ளி தாத்தாச்சாரியார் கார்டனில் 1995-ல் அனுமதியின் பேரில் 16- நான்கு மாடி கட்டிடங்கள் கட்டப்படவேண்டும். இங்கு அனுமதி இல்லாமல் 5-வது மாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இவை சம்மந்தமாக பல முறை 2007-லிருந்து எங்கள் சங்கம் மூலமாக எழுத்து மூலமாக நகராட்சிக்கு தெரிவிக்கப்பட்டது. திரு ஜெகநாத அய்யங்கார் அவர்கள் வாஸ் கட்டுமனதார்ர் மூலமாக கட்டுவதற்கு ஏற்படு செய்து ரங்கா, அம்மன், அகிலாண்டேஸ்வரி, பாலாஜி, குமரன் ஆகிய பன்மாடக்குடில் 2003 மற்றும் 2004-ல் கட்டியுள்ளார்கள். தற்பொழுது எங்களால் தெரிவிக்கப்பட்ட பிறகு மேற்குறிப்பிட்ட பெண்ட் ஹ்வுஸ்களுக்கு வரிவிதிப்பீடு செய்ய முடி எடுப்பதற்கு ஆயதம் செய்வதாக நாடகம் ஆடுகின்றார்கள். இங்கு நகராட்சி நிர்வாகத்திற்கு இழப்பீடு ரூபாய் 1,00,00/= நகராட்சி நிர்வாகத்தின் ஊழியர்களின் உதவியோடு நடைபெற்றுள்ளது. கேட்டால் முன் தேதியிட்டு வசூல் செய்வோம் என்று தெரிவித்துவிட்டு தங்கள் விருப்பம் போல் செய்வதே வேலை. இவர்களை திருத்தமுடியுமா? முடியும்ம்ம்ம்ம்—ஆனா—முடியாது-----ஏஏஏன்?--- அதுவா--- அது அப்படிதான்.
இந்த தவரான செயல்பாடுகள் வழ முறையில் செயல்படும் கட்டுமானதாரர்களை பிளாக் லிஸ்ட் செய்யுமா இந்த நகராட்சி நிர்வாகம்? செய்யவே செய்யாது. ஏன்? இழப்பீடு நகராட்சி நிர்வாகத்திற்கு தான். இவர்களுக்கு ------இழப்பீடு இல்லை---வருமானம்தான்.
இவ்வாறாக கோடிகணக்கில் இழப்பீடு செயப்பட்டுள்ளதை தஒடர்ந்து தெரிவிக்கப்படும்.

Wednesday, 27 April 2011

ஸ்ரீரங்கம் நகராட்சிக்கு இழப்பீடு - ஊழல் -நகராட்சி உழியர்கள் பொறுப்பு



மாம்பலச்சாலை தாத்தாசாரியார் கார்டனில் ரானா பன்மாடக்குடில் கட்டப்பட்டது 200-ல் இக்கட்டிடம் கட்டப்பட்டதில் இருந்து 18 குடியிருப்புகளுக்கு இது வரை வரி விதிப்பு செயப்படவில்லை.

இதுநாள்வரை எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த கட்டிடம் முன்னாள் தமிழக அமைச்சர் திரு நல்லுசாமி அவர்களால் கட்டப்பட்ட்தாக அறியவருகின்றது. அவர்கள் பொருப்பில் இந்நும் சில அடுக்குமாடி குடியிருப்புகள் இருந்துவருகின்றது. எனினும் வரி விதிக்கப்படவில்லை. வசூலீக்கப்படவும் இல்லை.

இந்த வரி விதிப்பு செய்யப்பட்டாமல் இருப்பதால் நகராட்சி நிர்வாகத்திற்கு ஏற்பட்ட்ள்ள இழப்பீடு ரூபாய் 3,00,000/= ஆகும்.


நகாராட்சி நிர்வாகம் அனைத்தும் தெரிந்தே செயல்பட்டு வருவது  மிகவும் வேதனைய்யும் அளிக்கின்றது. வரி முறையாக் கட்டி வருகின்றவர்களை அவமானப்படுத்துகின்ற வகையில் உள்ளதால் மக்களிடம் ஒரு வகை கொதிப்பு ஏற்படுதியுள்ளது.



ஸ்ரீரங்கம் நகராட்சிக்கு இழப்பீடு - ஊழல் -நகராட்சி உழியர்கள் பொறுப்பு


    மாம்பலச்சாலை தாத்தாசாரியார் கார்டனில் குமரன் பன்மாடக்குடில் கட்டப்பட்டது 2004-ல். இக்கட்டிடம் கட்டப்பட்டதில் இருந்து 16 குடியிருப்புகளுக்கு இது வரை வரி விதிப்பு செயப்படவில்லை.

 இக்கட்டிடம் திட்ட அனுமதி முடிந்தபிறகு தான் காலம் கடந்து கட்டப்பட்டுள்ளது. அனுமதி காலாவதியானபிறகு கட்டப்பட்ட இந்த கட்டிட்த்திற்கு நகராட்சி நிர்வாகத்தால் உறிய காலத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது சம்மந்தமாக தகவல் அறியும் சட்ட்த்தின் படி 23-3-2010-ல் கேட்கப்பட்டதும் நடவடிக்கை எடுப்பதாக பெயருக்கு நோட்டீஸ் நகராட்சியால் கொடுக்கப்பட்ட்து. மேலும் நகராட்சி நிர்வாகம் “குமரன் பிளாக் உரிமையாளர்கள் பதிவு ஆவணங்கள் ஏதும் சமர்ப்பிக்கப்படாதால் வரி விதிக்கபடவில்லை” 21-4-2010-ல் தெரிவித்தார்கள். மீண்டும் தகவல் அறியும் உறிமைச்சட்டத்தின் படி 8-5-2010-ல் கேட்கப்பட்டதற்கு “ கட்டிடம் கட்டப்பட்ட காலத்தில் கட்டிடம் கட்ட அனுமதி வேண்டி புதிப்பிக்கப்படவில்லை, சில குடியிருப்புகளுக்கு தற்பொழுது விதிக்கபட்டு சிறு தொகை வசூலிக்கப்பட்டது என்றும் “புதிய வரிவிதிப்பு செய்ய கட்டிட  உரிமையாளர்களுக்கு பத்திர நகல், காலிமனை வரி செலுத்திய நகல் சமர்ப்பிக்க மனுதார்ருக்கு அறிவிப்பு அனுப்பட்டுள்ளது(ந்.க.எண் அ3/4460/2010 13-04-2010)மேலும் “அனைத்து மனுதாரர் மின் இணைப்பு பெற்ற தேதியில் இருந்து சொத்து வரி விதிக்கப்படுவதால் மாநகராட்சிக்கு இழப்பீடு ஏதுமில்லை.வரிவிதிப்பீடு செய்யும் பொழுது த்ண்ட்த்தீர்வை ஏற்படுத்தப்படும்சம்மந்தப்பட்ட வருவாய் உதவியாளருக்கு விளக்கம் கோரி குறிப்பாணை வழங்கப்படுள்ளது.

இந்த ஏழு வருடங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துவிட்டு, கட்டுமானதாரருடன் உறவாடிவிட்டு-----
எனினும் இது நாள்வரை 16 குடிய்ருப்புகளுக்கு வரிவிதிக்கப்படவில்லை. இந்த ஏழு வருடங்களுக்கு நகராட்சி நிர்வாகத்திற்கு தோராயமாக இழப்பீடு ரூபாய்   1,70,000/ஏற்பட்டுள்ளது.=

பெயரளவில் நடவடிக்கை என்று தற்பொழுது செயல்பட்டு வருவது உழியர்களை காப்பாற்றவும், கட்டுமானதாரரை சுகப்படுத்தவும் மட்டுமே . எல்லாம் சுயலாபத்திற்கு என்றே------

நஃகராட்சி நிர்வாகத்திற்கு நிதி இழப்பு- யார் பொறுப்பு-ஊழியர்களேதான்


ஜெய்பூர் திருமணமண்டபம் மாம்பலச்சாலை திருச்சிராபள்ளி- இந்த திருமணமண்டபம் 1999-முன் கட்டப்பட்டது. நகராட்சி நிர்வாகத்தால் இந்த க்ட்டிடத்திற்கு அனுமதி வழங்கபட்டத என்று9-6-2008-ல் தகவல் அறியும் சட்டத்தின்படி கேட்கப்பட்டதிற்கு கட்டிடத்திற்கு அனுமதிஏதும் வழங்கப்படவில்லை என்று நகராட்சி நிர்வாகம் 27-6-2008-ல் தெற்வித்தது.. இதன் பிறகு நகராட்சி நிர்வாகம்ஜெய்பூர்பவன் நிர்வாகத்தின் மீது நிதிமன்றத்தில் 6-3-2009-ல் வழக்கு தொடர்ந்துள்ளது.10 வருடங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துவிட்டு விபரங்கள் கேட்கப்பட்டபிறகு வழக்கு என்று பெய்ரளவில் எடுக்கப்பட்டுள்ளது. ஆக இங்கு டெவலப்மெண்ட் கட்டணம் வசூலிக்கப்படாமலே விடப்பட்டுள்ளது.குறந்த அளவேகணக்கில்கொண்டு குறந்த மதிப்பீடு செய்து தவறானகணக்கிடுமூலம் வருவாய் இழப்பீடு என்பதை சுட்டிக்கண்பிதபிறகு தற்பொழுது மீண்டும் அளவீடு செய்து நகராட்சி நிர்வாகத்தல் மறுமதிப்பீடு செய்து , வரி உயர்த்தி நகராட்சி ஆணையர் அவர்களுக்கு சமர்ப்பிது நாட்கள், மாதங்கள் ஆகியும் இந்நும் மேல்நடவடிக்கையை வேண்டுமென்றே காலதமதம் என்ற பெயரில் உள்பேச்சுவார்த்தை நடந்துவருகின்றது.இந்தவழியில் நகராட்சி நிர்வாகத்திற்கு கடந்த 12 ஆண்டுகளாக நகராட்சி நிர்வாகத்திற்கு இழப்பீடு  வருடத்திற்கு சுமார் ரூபாய் 20,000 ஆக மொத்தம் ரூபாய் 2,40,000 இழப்பீடு ஏற்பட்டுள்ளது.இவைகள் அணைத்தும் நகராட்சி ஊழியர்களின்  வசிதிக்காகவே என்பது தெளிவு. இந்த ஒரு கட்டிடத்திற்கு மட்டும் தான் இந்த தொகை,
பாகம் 2 தொடரும் நாளை.