Thursday, 5 May 2011

ஸ்ரீரங்கம் நகராட்சி நிர்வாகமும் ஸ்ரீமான் ஜெகனாத அய்யங்கார் அவர்களும் இணைந்து அரங்கேற்றும் நாடகம்—மயானசாலையில்---


ஸ்ரீரங்கம் நகராட்சி நிர்வாகமும் ஸ்ரீமான் ஜெகனாத அய்யங்கார் அவர்களும் இணைந்து அரங்கேற்றும் நாடகம்—மயானசாலையில்---


திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் கோட்டம், மாம்பழச்சாலை, திம்மராயசமுத்திரம் கிராமம் ,சர்வே ஏன்:2327/ஏ1 முதல் ஏ10 வரை அடங்கிய தாத்தாச்சாரியார் தோட்டத்தின் தெற்கு எல்லையாகச் செல்லும் மயான சாலையய்-     4 அடி அகலத்திற்கு 400 அடி நீளத்திற்கு ஆக்கிரமிப்பு செய்து-ஜெகநாத அய்யங்கார் அவர்கள் சொந்தமாக தென்னை மரங்கள் பயிரிட்டு வருகின்றார்கள் என்பதை தெளிவாக எழுதி தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக மயான சாலை அகலம் குறுகி  பயன் பாட்டிற்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வருகின்றது என்பதை கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது.--அகற்றக்கோறிய நடவடிக்கைக்காக மனு-அளிக்கப்பட்டது. நகராட்சி நிர்வாகம் வேண்டுமென்றே தவறான தகவலை அளித்தது கண்டு மிகவும் வேதனை ஏற்படுத்தியது, அவர்கள் அளித்த பதிலில் மொத்தம் 0.2900 சதுரமீட்டர் பரப்பளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்கள்
           
   இந்த தகவலானது ஒரு முற்றும் படிக்காதவன் கூட அளிக்கமுடியாத ஒன்று ஆகும். எங்கல் கடிதத்திலேயே 400 அடி முழு நீளத்திற்கும் சுமார் 4 அடி அகலத்திற்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்திருந்தோம். இந்நிலையில் தற்பொழுது நீளம் மற்றும் அகலம் எதுவும் தெறிவிக்கப்படாமல் மொத்தம் 0.2900 சதுரமீட்டர் பரப்பளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்து எழுதி அளித்துள்ளார்கள். அதாவது சுமார் 3 ச.அடி. மொத்த நீளமான 400 அடிக்கும் சேர்த்து. இது சுமார் 1/10 “ தான் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அர்த்தம். என்னே விந்தையான கடிதம். படித்தவர்களால் எழுதப்பட்டது அல்ல. பொறுப்பற்றவர்கள் எழுதியுள்ளார்கள். வேலையில் கவனத்தை செலுத்தவில்லை.   மேலும் சரியான தகவlலை படத்துடன் அளிக்கவேண்டுமாயும், அத்துடன் காலம் தாழ்த்தாமல் ஆகிரமிப்பை அகற்ற வேண்டுமாயும் கேட்டுக்கொள்ளப்பட்ட்து. இது நாள் வரை நகராட்சி நிர்வாகம் இருக்கின்றதா என்று தெரியவில்லை..

No comments:

Post a Comment