Sunday, 8 May 2011

ஸ்ரீரங்கம் நகராட்சி நிர்வாகம், நடக்கின்றதா? நகருகின்றதா? உறங்குகின்றதா? இல்லை! இல்லை ! பின், உதவிகரமாக இருக்கின்றது. யாருக்கு ஸ்ரீமான் ஜெகநாத அய்யங்கார் அவர்களுக்கு. சுயலாபத்திற்காகதானா?


ஸ்ரீரங்கம் நகராட்சி நிர்வாகம், நடக்கின்றதா? நகருகின்றதா? உறங்குகின்றதா? இல்லை! இல்லை ! பின், உதவிகரமாக இருக்கின்றது. யாருக்கு ஸ்ரீமான் ஜெகநாத அய்யங்கார் அவர்களுக்கு. சுயலாபத்திற்காகதானா?
G.O. (D) NO. 125. Dt. 27.3.96 ன் படி சர்வே எண் TS No. 2327/a1 to a10 வார்டு எண் 3 பிளாக் 44 ஸ்ரீரங்கம் கோட்டம் 16 பன்மாடக்குடில்கள் G+3 கட்டுவதற்க்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கீழ்கண்ட நிபந்தனைகளுடன்,
1.மனுதார்ர் தனது சொந்த செலவில் குடிநீர் வசதிகளை செய்து தரப்படல் வேண்டும்.
2.பொது உபயோகத்திற்காக 10 விழுக்காடுகள் திறவிட்த்திற்காக விடப்பட வேண்டும்.
3.மனைப்பிரிவுகளில் சாலைகள் அமைக்கப்படவேண்டும்.
4.மனைப்பிரிவு சாலைகள்மற்றும் பொது உபயோக ஒதுக்கீடுகள் பார்வையில் ப்சுட்டிகாட்டியவாறு பராமரிக்கப்படவேண்டும்.
5.பொது சாலைகள் சிமெண்ட் கான்கிரீட் சாலைக்கள் அமைத்து தரப்படல் வேண்டும்.
இந்த வசதிகள் எதையும் செய்யாமல் கடந்த 16 வருடங்களாக பன்மாடக்குடில்களை மட்டும் கட்டி விற்று வந்த்தார்கள். அனுமத்ய் காலமாச்ன 6 வருடங்கள் வரை நீட்டிப்பு செது விட்டு மேற்கொண்டு நீட்டிக்க வழியில்லத நிலையில் அனுமத்ய் இல்லாமலே நகராட்சி நிர்வாகௌஉழியர்கள் துணையுடன்.
12-01 2006 தேதியிட்ட வழக்கறிஞரின்மூலம் அணைத்து வசதிகள் செய்யப்படவில்லை என்றகாரணத்திற்காகஒரு நோட்டீஸ் அனுப்ப்ப்பட்ட்து. அதற்கு பதிலாக சங்கம் வீட்டு உறிமையாளர்கலால் அமைத்துகொள்ள வேண்டும் என்றும், தனக்கும் இந்த பன்மாடக்குடில் அமைப்பிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும், எந்தவிதமான கடிதபோக்குவரத்தும் தன்னிடம் வைத்து கொள்ளக்கூடாது என்றும் வழக்கறிஞர் மூலம் அளித்தாரகள்.
28-03-2008-ல்வழக்கறிஞர் மூலம்சங்கம் ஒரு நோட்டீஸ் திரு ஜெகநாத அய்யங்கார் அவர்களுக்கு அனுப்பியது. அதில் அரசு உத்திரவின் படி வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை என்பதயும் 10 விழுக்காடு பொது இடம் அளிக்கப்படவில்லை என்றும், ஜெகநாத அய்யங்கார் அவர்களின் விளக்கம் எந்த சூழ்நிலையிலும் சர்யானத அல்ல என்றும் ,முற்றிலும் பித்தலாட்டமாக பதில் உள்ளதாகவும் தெரிவித்து எழுதப்பட்ட்து.அதற்கும் முன்பு கூறியபடியே பதி இருந்த்து.
இந்த நிலையில் பல 100-க்கணக்கில் கடிதம் நகராட்சி நிர்வாகத்திற்கு எழுதப்பட்டது. கண்துடைப்பு நாடகம் நடத்துவதையே தன் வழியாக கொண்டு பேருக்கு கடிதம் எழுதுவதை மட்டும் செய்து வந்தார்கள்.
வேறு வழியில்லாத நிலையில் மதுரை உயர்நீதிமன்றத்தில்  DIRECTOR OF TOWN AND COUNTRY PLANING , THE DISTRICT COLLECTOR TIRUCHIRAAPALLI,THE COMMISSIONER TRICHIRAAPALLI CORPORATION ஆகியோர்கள் மீது வழக்கு, தாதாசாரியார் ஆர்க்கேட் உறிமையாளர் சங்கம்  W.PNO. 6840 OF 2008  என்ற எண்ணில் வழக்கு தொடர்ந்த்து. அதன் தீர்ப்பானது  மூன்று மாதங்களுக்குள் நகராட்சி நிர்வாகமும் நகர் ஊரமைப்பு அதிகாரிகளும் சேர்ந்து இந்த தாத்தாசாரியார் ஆர்கேட் வளாகத்தில் திட்டம் செயல்பட்ட்தை ஆய்ந்து முறயான சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், அறிகையய் குறிப்பிட்ட காலத்திற்குள் சங்கத்திற்கு அளிக்கவேண்டும் என்று உத்திரவு இடப்பட்ட்து.
இந்த நிலையில் மூன்று மாத கடசியில் நகராட்சி நிர்வாகம் எங்கள் இடத்தை பார்வையிட்டு அளந்து சரிபார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. எந்த எல்லை கல்லையும் பார்க்காமலே தவறான கணக்கீடு செய்து அறிகை தயார் செய்யும் பொழுதே ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல என்பதை தெளிவு படுத்தி கடிதம் அளித்து சங்கம். இந்த கடிதமும் எப்பொழுதும் போலவே இந்த எங்களது வேண்டுகோளும் குப்பையில் போடப்பட்டது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த முறையில்லா நடவடிக்கைக்கு காரணமானவர்கள் திரு லக்ஷ்மனமூர்த்தி உதவி பொறியாளர் ஸ்ரீரங்கம் நகராட்சி மற்றும் திரு சிவபாதம் உதவி பொறியாளர் திருச்சிராப்பள்ளி நகராட்சி ஆகியோர்களேதான்.
இதன் மேற்கொண்டு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மீண்டும் சங்கம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, ஆணயைர் திருச்சிராப்பள்ளி நகராட்சி நிர்வாகம், மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியாளர் ஆகியோர்மீது தற்பொழுது போடப்பட்டுள்ளது. நிலுவயில் உள்ளது.
இந்நிலையிலும் இன்று வரை நகராட்சி நிர்வாகம் கண்தொடைப்பு நாடகத்தயே காட்டுகின்றது.


No comments:

Post a Comment